இரங்கல்பா
திருச்சிற்றம்பலம்
இருந்தவர் இறந்தார்
அங்கே மறைந்தார்
அய்யோ, அவர்கள்
பக்கத்தில் இல்லை.
ஆதலால்
துக்கம் வந்தது,
கண்ணீர் வழிந்தது.
பல் நினைவுகள்
திரும்பினது.
தூக்கம் போனது.
சக்தி இழந்தேன்.
பிறகு
இயற்கையின்
தாக்கத்தில்,
தூக்கம் வந்தது.
அத்தூக்கத்தினால்
துக்கம் போனதோ?
பல நினைவுகளும்
மறைந்ததோ?
மற்ற உணர்ச்சிகளும்
இறந்தததோ?
இல்லை.
ஆனால்,
காலப்போக்கில்
இயற்கையின்
நியதியால்
தூக்கம்தான் போனது.
போனவை பல, திரும்பியது
ஆனால் அய்யகோ
அவர்கள்
திரும்பவில்லை.
திருச்சிற்றம்பலம் !
வாழ்க்கையின்
திரு + சித்து + அம்பலம் =
இறைவன் + ஆடும் + ஆட்டம்.
Comments
Post a Comment